வாழ்வின் வழி!


நற்செய்தி: யோவான்  5:23-24.  


எவ்வழி நல்வழி என்றறியாது,


எழுந்து நடவா மனிதருக்கு,

செவ்வழி உன்வழி என்றறிவித்து,

செயலில் நடத்தும் இறை மகனே,

இவ்வழி தவிர வேறிலையென்று,

இனிதே செல்லும் புனிதருக்கு,

அவ்வழி சொல்லும் வாழ்வடைய,

அன்பு ஊற்றி, நிறை மகனே!


-ஆமென்.


-கெர்சோம் செல்லையா.