மரம் வெட்டுகிறேன்!

மரம் வெட்டுகிறேன்!  
காயும் வெயிலிற்கு, காற்றாகும் என நினைத்தேன்.
சாயும் நிலை வந்து, சரிந்து நீ போனாயே.  
பாயும் மின்னிணைப்பு , பற்றிடுமோ எனத் தவித்தேன்;  
ஆயும் நிலையிழந்து,  அகற்ற நான் வெட்டுகிறேன்.  
வாயும் வயிறு என்று, வருந்துகிற மனிதருக்கு,  
நீயும் நிழல் கொடுத்து, நெடுநாட்கள் பணிபுரிந்தாய். 
நாயும் விலங்குகளும், நன்றியில் உனைப் பார்க்கும்.   
தேயும் மனிதரிடம் தேடாதே, நான் கொட்டுகிறேன்.  

-கெர்சோம் செல்லையா.