மறுதலித்தல்!

இயேசுவை அறியேன் என்பவரே!  
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:56-60.  

56  அப்பொழுது ஒரு வேலைக்காரி அவனை நெருப்பண்டையிலே உட்கார்ந்திருக்கக்கண்டு, அவனை உற்றுப்பார்த்து: இவனும் அவனோடிருந்தான் என்றாள்.

57  அதற்கு அவன்: ஸ்திரீயே, அவனை அறியேன் என்று மறுதலித்தான்.

58  சற்றுநேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைக் கண்டு: நீயும் அவர்களில் ஒருவன் என்றான். அதற்குப் பேதுரு: மனுஷனே, நான் அல்ல என்றான்.

59  ஏறக்குறைய ஒருமணி நேரத்துக்குப்பின்பு வேறொருவன் அவனைப் பார்த்து: மெய்யாகவே இவனும் அவனோடிருந்தான், இவன் கலிலேயன்தான் என்று சாதித்தான்.

60  அதற்குப் பேதுரு: மனுஷனே, நீ சொல்லுகிறதை அறியேன் என்றான். அவன் இப்படிச் சொன்னவுடனே சேவல் கூவிற்று.  

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை அறியேன் என்றுரைத்த,  

மூத்த அடியார் நிலைவந்தால்,  

எம்முறை எடுப்போம் என்பதனை,  

எண்ணிப் பார்ப்போம் கிறித்தவரே.  

நம்முளிலுறையும் கிறித்துவினை,  

நாமே மறுத்து நலந்துறந்தால், 

செம்முறைகூறும் தீர்ப்பு வரும்;  

சிந்திப்பீர், சீர் பறித்தவரே! 

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.