மறுதலிப்பு!

மறுதலிப்பு!  
கிறித்துவின் வாக்கு: லூக்கா 22:34.  34  அவர் அவனை நோக்கி: பேதுருவே, இன்றைக்குச் சேவல் கூவுகிறதற்கு முன்னே நீ என்னை அறிந்திருக்கிறதை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  
நெருக்கும் கொடியோர் வரும்போது,    
நெருங்கிய உறவும் ஒதுங்கிடுமாம்.  
சுருக்கும் கயிற்றைத் தரும்போது,  

சுவைக்கிற நட்பும் பதுங்கிடுமாம்.   
மறுக்கும்  பேதுருபோல் நமது,  

மனங்கள் இருப்பின் வருந்திடுமாம்.  
இருக்கும் உண்மை  நிலைமையிது;  
இயேசு நோக்கின் திருந்திடுமாம்!  
ஆமென்.

-கெர்சோம் செல்லையா.