தூங்காதீர்!

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!
கிறித்துவின் வாக்கு:  லூக்கா 22:45-46.  

45  அவர் ஜெபம்பண்ணி முடித்து, எழுந்திருந்து, தம்முடைய சீஷரிடத்தில் வந்து, அவர்கள் துக்கத்தினாலே நித்திரை பண்ணுகிறதைக் கண்டு:

46  நீங்கள் நித்திரைபண்ணுகிறதென்ன? சோதனைக்குட்படாதபடிக்கு, எழுந்திருந்து ஜெபம்பண்ணுங்கள் என்றார்.  

கிறித்துவில் வாழ்வு:  

இக்கட்டு சோதனை இன்னல் யாவும்,  

இறைவனின் செயலாய் எண்ணாதீர்.  

மக்கட்கு துன்பம் தந்தை தராரே,   

மனதிலும் தவறு பண்ணாதீர்.  

எக்கட்டு கட்டி, அலகை வந்தாலும்,    

இயேசு இருக்கிறார், ஏங்காதீர்.  

திக்கற்று நிற்போர் வேண்டல் கேட்பார்;   

தெய்வத்தின் முன்பு தூங்காதீர்!   

ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.