முதன்மை மருத்துவர்! முதன்மை மருத்துவர்! கிறித்துவின் வாக்கு: லூக்கா5:17. 17 பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக் கொண்டிருக்கிறபோது கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள சகல கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயரும் நியாயசாஸ்திரிகளும் உட்கார்ந்திருந்தார்கள்; அப்பொழுது பிணியாளிகளைக் குணமாக்கத்தக்கதாகக் கர்த்தருடைய வல்லமை விளங்கிற்று. கிறித்துவில் வாழ்வு: அறிவிற்கு அப்பால் அமைதி என்றானால், அதனை அளிப்பவர், யார் நண்பா? முறிவிற்கும் நோய்க்கும் மருந்திலை என்றால், முதன்மை மருத்துவர், யார் அன்பா? நெறிமுறை கெடுப்பதே வாழ்க்கை என்றானால், நேர்மை யாரிடம், பார் நண்பா. குறிதவறாது வாழ்வதற்கென்றால், கிறித்து அரசரைப் பார் அன்பா! ஆமென்.