மன்னிப்பு!

மன்னிப்பு!
கிறித்துவின் வாக்கு: லூக்கா: 5:20-23.
20 அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மனுஷனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.
21 அப்பொழுது வேதபாரகரும் பரிசேயரும் யோசனைபண்ணி, தேவதூஷணம் சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றிப் பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார் என்றார்கள்.
22 இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்கள் இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறதென்ன?
23 உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ, எழுந்து நடவென்று சொல்வதோ, எது எளிது?

கிறித்துவில் வாழ்வு:
உடற் பிணி வந்தால், மருத்துவர் உண்டு.
உளப் பிணியாளர்க்கும் மருத்துவம் உண்டு
திடப்படுத்தலுக்கும் பலபேர் உண்டு.
தீவினை தீர்க்க வழி எங்குண்டு?
கடல் போல் தெரியும் வாழ்க்கை உண்டு.
கவிழ்ந்த படகில் விழுந்தவர் உண்டு.
அடம் பிடிக்காமல் வருபவர் உண்டு.
அவரை மீட்க மன்னிப்புண்டு!
ஆமென்.

Image may contain: sky and outdoor
LikeShow More Reactions

Leave a Reply