எப்படி புகழ் வரும்?

எப்படி புகழ் வரும்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா :4:36-37.
36 எல்லாரும் ஆச்சரியப்பட்டு: இது என்ன வார்த்தையோ! அதிகாரத்தோடும் வல்லமையோடும் அசுத்த ஆவிகளுக்கும் கட்டளையிடுகிறார், அவைகள் புறப்பட்டுப் போகிறதே என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
37 அவருடைய கீர்த்தி சுற்றிலுமிருந்த நாடுகளிலுள்ள இடங்களிலெல்லாம் பிரசித்தமாயிற்று.

கிறித்துவில் வாழ்வு:
பெயரும் புகழும் யாரால் கிடைக்கும்?
பெரியவர் பலருக்குத் தெரியவில்லை!
உயரும் மதிப்பை எதுதான் உடைக்கும்?
உண்மையற்றோர் இதைப் புரியவில்லை!
துயரும் மகிழ்வும் கலந்த வாழ்வில்,
தொண்டால்தானே புகழ் கிடைக்கும்.
வயிறும் வாயும் வாழ்க்கை என்றால்,
வந்த புகழைப் பழி உடைக்கும்!
ஆமென்.

Image may contain: one or more people and child
LikeShow More Reactions

Comment