இறைவேண்டல்

Gershom Chelliah

04:23 (0 minutes ago)

prayer-mother-teresa.jpg

இறைவேண்டல் ஏறெடுப்போம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:15-16.
15 அப்படியிருந்தும் அவருடைய கீர்த்தி அதிகமாகப் பரம்பிற்று. திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியமடைவதற்கும் கூடிவந்தார்கள்.
16 அவரோ வனாந்தரத்தில் தனித்துப்போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
கூட்டாய், குழுவாய் வேண்டுதல் நன்று;
குடும்பம் இணைந்து கேட்பதும் நன்று.
பாட்டாய்ப் பாடி படைத்தலும் நன்று;
பன்முறை நாளில் தனித்தலும் நன்று.
ஆட்டம் போட்டு கேட்பது அன்று,
ஆண்டவர் விருப்பை அறிவோம் இன்று.
பூட்டைத் திறக்கும் கோலைப் போன்று,
புனிதரின் ஆவியில் கேட்பதே நன்று!
ஆமென்.

விளம்பரம் செய்யாதீர்!

thequint%2F2016-01%2F87c28cb9-3dd2-4095-88bf-8584433e9bab%2FGladysDaughter.jpg

விளம்பரம் செய்யாதீர்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா:14.
14 அவர் அவனை நோக்கி: நீ இதை ஒருவருக்கும் சொல்லாமல், போய், உன்னை ஆசாரியனுக்குச் காண்பித்து, நீ சுத்தமானதினிமித்தம், மோசே கட்டளையிட்டபடியே, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று செய்தால் ஒன்பது என்னும்
ஊரைத்தானே பார்க்கிறோம்.
இன்று எதுவும் செய்யாதோரை,
இங்கே தலைவராய்ச் சேர்க்கிறோம்!
அன்று இயேசு சொன்னது பாரும்;
அமைதி ஊழியம் நிரந்தரம்.
தொண்டு செய்வோர் புகழ்ச்சி தேடின்,
தொழுநோய் aakum விளம்பரம்!
ஆமென்.

விடைக்குள் வராத விருப்பம்!

விடைக்குள் வராத விருப்பம்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:12-13.
12 பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கையில், குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனுஷன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புற விழுந்து: ஆண்டவரே, உமக்குச் சித்தமானால், என்னைச் சுத்தமாக்க உம்மாலே ஆகும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.
13 அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்குச் சித்தமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனை விட்டு நீங்கிற்று.

கிறித்துவில் வாழ்வு:
படைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
படைத்த இறையிடம் கேட்டிடுவோம்.
கிடைக்கப்பெற்றதில் நோக்கமுண்டு;
கிறித்து அற்றதை விட்டிடுவோம்.
உடைக்கப்பட்டதில் நோக்கமுண்டு;
ஒற்றுமை ஆவியுள் கூட்டிடுவோம்.
விடைக்குள் வராத ஏக்கமுண்டு;
விண்ணரசரிடம் காட்டிடுவோம்!
ஆமென்.

Image may contain: plant, outdoor and text
LikeShow More Reactions

Comment

அக்கா-தங்கை.

அக்கா- தங்கையுடன்!

எக்கோலம் கொண்டாலும், கையூட்டு வேண்டாம்;
என்று பணி செய்தவருள், எம் தந்தை உண்டாம்.
இக்கால நல்வாழ்வு, தாயின் மன்றாட்டாம்;
இதன்படி வாழ்கின்ற இவரே என் கூட்டாம்!

-கெர்சோம் செல்லையா

Image may contain: Maby Sundar, Thirugnanam Mylapore Perumal and Bhavani Jeeja Devaraj, people standing and indoor

எளிமையிலே வலிமை!

எளிமையிலே வலிமை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:10-11.
10 சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரராகிய யாக்கோபும் யோவானும் அந்தப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இதுமுதல் நீ மனுஷரைப் பிடிக்கிறவனாயிருப்பாய் என்றார்.
11 அவர்கள் படவுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும் விட்டு, அவருக்குப் பின்சென்றார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
யானை வலிமை இருந்தால்தானே,
எதையும் செய்ய முடியுமென்பார்.
சேனை திரண்டு சென்றால்தானே,
செருவில் வெற்றி படியுமென்பார்.
வானை விடுத்த இறைவனின் மகனோ,
வலிமையை எளிமையில் காட்டுகிறார்.
மீனை பிடிக்கிற ஏழையராலே,
மீட்பின் அரசை நாட்டுகிறார்!
ஆமென்.

Image may contain: 1 person, standing, ocean, child, outdoor and water
LikeShow More Reactions

Comment

சீர்படுத்தும் இறையே!

சீர்படுத்தும் இறையே!

கிறித்துவின்  வாக்கு:லூக்கா 5:8-9.
8 சீமோன் பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனுஷன், நீர் என்னைவிட்டுப்போகவேண்டும் என்றான்.
9 அவர்கள் திரளான மீன்களைப் பிடித்ததினிமித்தம், அவனுக்கும் அவனோடுகூட இருந்த யாவருக்கும் பிரமிப்புண்டானபடியினால் அப்படிச் சொன்னான்.

கிறித்துவில் வாழ்வு:
அய்யா, உம் அடி வரும் வரையில்,
அநீதி, தவற்றையும் வான் புகழ்ந்தேன்.
பொய்யாய் என்னை மேலுயர்த்திப்
புனித வடிவிலும் நான் திகழ்ந்தேன்.
மெய்யாம் உம்மிடம் வந்த பின்னர்,
மேன்மையறிந்து எனை இகழ்ந்தேன்.
செய்யாதவையுடன் செய்தவையும்,
சீர் படுத்தும்மில், இனி மகிழ்வேன்!
ஆமென்.

எப்படி வாழ்வோம்?

எப்படி வாழ்வோம்?
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:4-7.
4 அவர் போதகம்பண்ணி முடித்த பின்பு சீமோனை நோக்கி: ஆழத்திலே தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்கும்படி உங்கள் வலைகளைப் போடுங்கள் என்றார்.
5 அதற்குச் சீமோன்: ஐயரே, இராமுழுவதும் நாங்கள் பிரயாசப்பட்டும் ஒன்றும் அகப்படவில்லை; ஆகிலும் உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன் என்றான்.
6 அந்தப்படியே அவர்கள் செய்து, தங்கள் வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தார்கள்.
7 அப்பொழுது மற்றப் படவிலிருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவி செய்யும்படிக்குச் சைகைகாட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படவுகளும் அமிழத்தக்கதாக நிரப்பினார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
எங்கே எப்படி வாழ்வோம் என்று,
ஏங்கும் எங்கள் நண்பரே,
அங்கே அவர்கள் கேட்டபோது,
அடைந்தார் நன்மை, உண்மையே.
முங்கும் நிலையில் நானுமிருக்க,
முன்னால் வந்தவர் இயேசுவே.
மங்கா வாழ்வை எனக்கும் தந்து
மகிழச் செய்தார் நேசரே!
ஆமென்.

Image may contain: one or more people, people sitting and outdoor
LikeShow More Reactions

படவில் அமர்ந்து உரைத்த செய்தி!

படவில் அமர்ந்து உரைத்த செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 5:1-3.
1 பின்பு அவர் கெனேசரேத்துக் கடலருகே நின்றபோது, திரளான ஜனங்கள் தேவவசனத்தைக் கேட்கும்படி அவரிடத்தில் நெருங்கினார்கள்.
2 அப்பொழுது கடற்கரையிலே நின்ற இரண்டு படவுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் அவைகளை விட்டிறங்கி, வலைகளை அலைசிக்கொண்டிருந்தார்கள்.
3 அப்பொழுது அந்தப் படவுகளில் ஒன்றில் ஏறினார், அது சீமோனுடையதாயிருந்தது; அதைக் கரையிலிருந்து சற்றே தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படவில் உட்கார்ந்து, ஜனங்களுக்குப் போதகம்பண்ணினார்.

கிறித்துவில் வாழ்வு:
படவில் அமர்ந்து, பரமன் உரைத்த,
பழம்பெரு செய்தி கேட்டீரா?
உடம்பில் ஒட்டா உலகப் பொருட்கள்,
ஒழிவதும் காண மாட்டீரா?
சடங்கின் வழியாய் மீட்பைப் பெறுதல்,
சரியாகாதென அறிவீரா?
முடங்கும் மூச்சு, அடங்கும் முன்னே,
மும்மைத் தெய்வம் தெரிவீரா?
ஆமென்.

Image may contain: sky, outdoor and water
LikeShow More Reactions

Comment

எங்கும் சொல்வோம்!

எங்கும் சொல்வோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:42-44.
42 உதயமானபோது, அவர் புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப் போனார். திரளான ஜனங்கள் அவரைத் தேடி, அவரிடத்தில் வந்து, தங்களை விட்டுப் போகாதபடிக்கு அவரை நிறுத்திக்கொண்டார்கள்.
43 அவரோ அவர்களை நோக்கி: நான் மற்ற ஊர்களிலும் தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவேண்டும், இதற்காகவே அனுப்பப்பட்டேன் என்றார்.
44 அந்தப்படியே கலிலேயா நாட்டிலுள்ள ஜெபஆலயங்களில் பிரசங்கம் பண்ணிக்கொண்டுவந்தார்.

கிறித்துவில் வாழ்வு:
பொங்கும் அருளைப் பெற்றவரே,
புனிதர் ஊழியம் பார்ப்பீரே.
எங்கும் சென்று இறையரசை
இயம்பி, மீட்பில் சேர்ப்பீரே.
அங்கும் இங்கும் அமராமல்,
ஆண்டவர் வழியில் செல்வீரே.
தங்கும் ஆவியர் துணையிருப்பார்;
தரணி முழுவதும் சொல்வீரே!
ஆமென்.

Image may contain: ocean, text, outdoor and nature
LikeShow More Reactions

Comment

பல்வலிப் பாடல்!

பல்வலிப் பாடல்!

பற்கள் இருப்பது வலிக்கேயென்றால்,
பசியே என்னைத் தொடாதே!
புற்கள் நிறைந்தது வயலேயென்றால்,
புசிப்பது கண்ணில் படாதே!
சொற்கள் தருவது தீமையேயென்றால்,
சொந்தக் கருத்தைக் கொடாதே!
பிற்காலத்தில் அறுப்பதை நினைப்பாய்;
பிழைத்த வினைகள் விடாதே!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text