இறப்பு என்னும் துயில்!

இறப்பு என்னும் துயில்!
நற்செய்தி மாலை:மாற்கு 14:32-34.
” பின்னர் இயேசுவும் சீடர்களும் கெத்சமனி என்னும் பெயர் கொண்ட ஓர் இடத்திற்கு வந்தார்கள். அங்கே அவர் தம் சீடரிடம், ‘ நான் இறைவனிடம் வேண்டும்வரை நீங்கள் இங்கே அமர்ந்திருங்கள் ‘ என்று கூறி, பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரைத் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் திகிலும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், ‘ எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது; நீங்கள் இங்கேயே தங்கி விழித்திருங்கள் ‘ என்று அவர்களிடம் கூறினார்.”
நற்செய்தி மலர்:
இறப்பைக் குறித்து எண்ணும்போது,
யாவரும் அடைவது திகிலாகும்.
எங்கு செல்வோம் என்றறியார்க்கு,
எட்டும் உயரம் முகிலாகும்.
பிறப்பின் பொருளை அறிவாருக்கு,
இறப்பு ஒருவகை துயிலாகும்.
பிறவி தந்த இறையுடன் இணையும்
பெரும்பேறுதான் ஒயிலாகும்!
ஆமென்.

No automatic alt text available.