நமது நேர்மையைப் பார்ப்போம்!

நமது நேர்மையைப் பார்ப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு: 14 : 43 -46 .
“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனான யூதாசு வந்தான். அவனோடு தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர், மூப்பர் ஆகியோர் அனுப்பிய மக்கள் கூட்டம் வாள்களோடும், தடிகளோடும் வந்தது. அவரைக் காட்டிக்கொடுக்கவிருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு, அவரைப் பிடித்துக் காவலோடு கொண்டு போங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் வந்ததும் உடனடியாக அவரை அணுகி, ‘ ரபி ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். அவர்களும் அவரைப் பற்றிப் பிடித்துக் கைது செய்தனர்.”

நற்செய்தி மலர்:
எத்தனையோ வழிகளிலே,
ஏமாற்ற முயல்கின்றோம்;
அத்தனையும் பொய்க்கையிலே
ஆண்டவனின் செயலென்றோம்!
இத்தரையில் இவை யாவும்,
ஏற்புடைத்த இயல்பென்றோம்.
முத்தமிட்ட யூதனை நாம்,
முதலில் ஏன் கயவனென்றோம்?
ஆமென்.

No automatic alt text available.