கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை!

கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை!
நற்செய்தி மாலை: மாற்கு 14:39-42.
“அவர் மீண்டும் சென்று அதே வார்த்தைகளைச் சொல்லி இறைவனிடம் வேண்டினார். அவர் திரும்பவும் வந்தபோது அவர்கள் உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களுடைய கண்கள் தூக்கக் கலக்கமாய் இருந்தன. அவருக்கு என்ன மறுமொழி கூறுவது என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவர் மூன்றாம் முறை வந்து அவர்களை நோக்கி, ‘ இன்னும் உறங்கி ஓய்வெடுக்கிறீர்களா? போதும், நேரம் வந்துவிட்டது. மானிடமகன் பாவிகளின் கையில் ஒப்புவிக்கப்படப் போகிறார். எழுந்திருங்கள், போவோம். இதோ, என்னைக் காட்டிக் கொடுப்பவன் நெருங்கி வந்துவிட்டான் ‘ என்று கூறினார்.”

நற்செய்தி மலர்:
காட்டிக் கொடுப்பவன் வருவதை அறிந்து,
கடவுளின் மைந்தன் ஒளிக்கவில்லை.
கூட்டில் விழுந்த பறவையாய் நொந்து,
கூட்டம் கூட்டவும் விளிக்கவில்லை.
ஆட்டம் போட்டு அலறும் நாம்தான்,
அடுத்தவர் துயரிலும் ஒளிக்கின்றோம்.
பாட்டில் சொல்லும் பொருளையறிந்தால்,
படைத்தவர் விருப்பில் களித்திடுவோம்!
ஆமென்.

Image may contain: one or more people and people standing