இயல் இசைப் பொழிவு கேட்பவரே!

இயல் இசைப் பொழிவைக் கேட்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 9:7-8.
“அப்போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட அந்த மேகத்தினின்று, ″ என் அன்பார்ந்த மைந்தர் இவரே; இவருக்குச் செவிசாயுங்கள் ″ என்று ஒரு குரல் ஒலித்தது. உடனடியாக அவர்கள் சுற்றுமுற்றும் பார்த்தார்கள். தங்கள் அருகில் இயேசு ஒருவரைத் தவிர வேறு எவரையும் காணவில்லை.”

நற்செய்தி மலர்:
எங்கெல்லாமோ ஓடியும் ஆடியும்,
இயலிசைப் பொழிவைக் கேட்டீரே!
இங்கே நம்முள் உறைந்திருக்கும்
இறை மொழி கேட்க மாட்டீரே!
அங்கெல்லாம் போய் வந்தபின்பும்
அமைதி கேட்டது நம் மதியே!
மங்காச் செல்வம் தெய்வ அன்பே;
மகிழ்ந்து ஏற்றால், நிம்மதியே!
ஆமென்.

Image may contain: one or more people
LikeShow More Reactions

Comment

Leave a Reply