மலை மேல் இருத்தல்…

மலைமேல் இருத்தல்…
நற்செய்தி மாலை: மாற்கு 9:4-6.
“அப்போது எலியாவும் மோசேயும் அவர்களுக்குத் தோன்றினர். இருவரும் இயேசுவோடு உரையாடிக் கொண்டிருந்தார்கள். பேதுரு இயேசுவைப் பார்த்து, ‘ ரபி, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம் ‘ என்றார். தாம் சொல்வது என்னவென்று அவருக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவர்கள் மிகுந்த அச்சம் கொண்டிருந்தார்கள்.”

நற்செய்தி மலர்:
மலை மேல் இருத்தல் நல்லது என்று,
மறுவுரு கண்டவர் எண்ணுகிறார்.
தலைக்கொரு கூடம் அமைக்கும் தம்மை
தலைவராய் உயரப் பண்ணுகிறார்.

கலையழகுள்ள மலையில் இறங்கும்
காட்டு அருவியைக் காண்பவர் யார்?
நிலைகள் உயரும், நேர்மை பரவும்;
நீர்போல் இறங்கி, பயன்தரப் பார்!
ஆமென்.

Image may contain: plant, outdoor, nature and water
LikeShow More Reactions

Comment

Leave a Reply