பதற்றத்தில் பேசவேண்டாம்!

பதற்றத்தில் பேசாதீர்!

நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.

“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
ஆழ் கடலில் நடந்திடவும்,
ஆண்டவர்க்குத்  தெரியும்.
அறியாத மானிடர்க்கோ,
அதுமாறிப் புரியும்.
பாழ் உலகில் அதிசயங்கள் 
படைத்தவரின் மிச்சம்.
பதற்றத்தில் பேசாதீர்;
பரவி விடும் அச்சம்!
ஆமென்.

Leave a Reply