படைத்தவர் தெளிவு தருகின்றார்!

படைத்தவர் தெளிவு தருகின்றார்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:48-49.
“அப்போது எதிர்க் காற்று அடித்தது. சீடர்கள் தண்டு வலிக்கப் பெரிதும் வருந்துவதைக் கண்ட அவர் கடல்மீது நடந்து அவர்களை நோக்கி வந்தார்; அவர்களைக் கடந்து செல்ல விரும்பினார். அப்போது ஏறக்குறைய நான்காம் காவல்வேளை. அவர் கடல்மீது நடப்பதைக் கண்டு, ‘ அது பேய் ‘ என்று எண்ணி அவர்கள் அலறினார்கள்.”
நற்செய்தி மலர்:
கடல் மேல் நடந்து காத்திட விரைந்த
கடவுளின் மகனையே பேய் என்றார்!
உடல் பொருள் ஆவி ஒடுக்கி உழைத்த
ஊழியர்கூட இதைச் சொன்னார்!
இடம் பொருள் ஏவல் தெரியாததனால்
இப்படி மனிதர் தவறுகின்றார்.
படம் போல் பார்க்கும் அறிவைக் கேட்போம்;
படைத்தவர் தெளிவைத் தருகின்றார்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply