மற்றவரும் மனிதர்களே!

மற்றவரும் மனிதரென
மதிக்கும் நல்லறிவை,
கற்றவராய் புகட்டாது,
காலங்களை உடைத்தோம்.
பெற்றவராய் இனி திருந்தி,
பிள்ளைபோல் நடப்போம்.
சுற்றியுள்ள சிறைகளிலே
சாதிகளை அடைப்போம்!
-கெர்சோம் செல்லையா.