அனைவருக்குணவு நீர் தாரும்!

 

அனைவருக்குணவு நீர் தாரும்!
நற்செய்தி மாலை: மாற்கு 6:41-44
“அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பாhத்து, கடவுளைப் போற்றி, அப்பங்களைப் பிட்டு, அவர்களுக்குப் பரிமாறுவதற்காகத் தம் சீடரிடம் கொடுத்தார். அவ்வாறே அந்த இரு மீன்களையும் எல்லாருக்கும் பகிர்ந்தளித்தார். அனைவரும் வயிறார உண்டனர். பின் எஞ்சிய அப்பத் துண்டுகளையும் மீன் துண்டுகளையும் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர். அப்பம் உண்ட ஆண்களின் தொகை ஐயாயிரம்.”
நற்செய்தி மலர்:
மண்ணாகிப் போன திட்டங்களாலே,
மனிதர் பட்டினி கிடக்கின்றார்.
உண்ணாது அலையும் ஏழையருக்கு,
உதவார் கதவை அடைக்கின்றார்.
எண்ணாது இவரை இப்படிவிட்டால்,
இந்தியா எப்படி முன்னேறும்?
அண்ணாந்து பார்த்து போற்றிய மகனே,
அனைவருக்குணவு நீர் தாரும்!
ஆமென்.

நற்செய்தி மாலை's photo.

Leave a Reply