நாள்தோறும் நற்செய்தி

இரண்டு கள்வரிடையே இயேசு!

நற்செய்தி: மத்தேயு 27:38.
“அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்.”

நல்வாழ்வு:

திரண்டு தூயர் பின்வந்தாலும்,

தெய்வ மகனின் பக்கம் யார்?

இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,

இன்று நமையும் எண்ணிப் பார்?

புரண்டு போகும் உலக வாழ்வில்,

பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,

மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;

மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!
ஆமென்.

இரண்டு கள்வரிடையே இயேசு!</p>
<p>நற்செய்தி: மத்தேயு 27:38.<br />
"அதன்பின் அவருடைய வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக இரு கள்வர்களை அவருடன் சிலுவைகளில் அறைந்தார்கள்."</p>
<p>நல்வாழ்வு:<br />
திரண்ட தூயர் பின்வந்தாலும்,<br />
தெய்வ மகனின் பக்கம் யார்?<br />
இரண்டு கள்வர் தொங்குதல்கண்டு,<br />
இன்று நமையும் எண்ணிப் பார்?<br />
புரண்டு போகும் உலக வாழ்வில்,<br />
பொய்யர் சூழ்ந் திருந்தாலும்,<br />
மிரண்டு அஞ்சிக் கலங்கவேண்டாம்;<br />
மீட்பர் தொங்கிக் காட்டுகிறார்!<br />
ஆமென்.

மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
“பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ‘ இவன் யூதரின் அரசனாகிய இயேசு ‘ என்று எழுதப்பட்டிருந்தது.”
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.
Photo: மன்னன் தலைமேல் பாருங்கள்!

இறைவாக்கு: மத்தேயு 27: 36-37.
"பின்பு அங்கே உட்கார்ந்து காவல் காத்தார்கள்; அவரது தலைக்கு மேல் அவரது மரணதண்டனைக்கான காரணத்தை எழுதி வைத்தார்கள். அதில் ' இவன் யூதரின் அரசனாகிய இயேசு ' என்று எழுதப்பட்டிருந்தது."
இனியவாழ்வு:
குற்றம் என்ன செய்தார் என்று 
கேள்வி கேட்போர் வாருங்கள்.
மற்றவர் அறிய எழுதி வைத்தார்;
மன்னன் தலைமேல் பாருங்கள்.
சற்றும் தீங்கு எண்ணாதவரே 
சாகத் துடிக்கிறார், கூறுங்கள்.
பற்றும் பாவம் முற்றும் போகும்;
பாங்காய் அரசில் சேருங்கள்!
ஆமென்.