மகனைத் தந்தை கைவிடுவாரோ?

நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
“நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ‘ ஏலி, ஏலி லெமா சபக்தானி? ‘ அதாவது, ‘ என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ‘ என்று உரத்த குரலில் கத்தினார்.”

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம்
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.

Photo: மகனைத் தந்தை கைவிடுவாரோ?
நல்வாக்கு: மத்தேயு 27:45-46.
"நண்பகல் பன்னிரண்டு மணிமுதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடு முழுவதும் இருள் உண்டாயிற்று. மூன்று மணியளவில் இயேசு, ' ஏலி, ஏலி லெமா சபக்தானி? ' அதாவது, ' என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்? ' என்று உரத்த குரலில் கத்தினார்."

நல்வாழ்வு:
மகனைத் தந்தை கைவிடுவாரோ?
மாட்டார் என்பதை அறிவீரே.
இகத்தின் மனிதர் செய்யும் பாவம் 
இயேசு சுமக்க, விட்டாரே.
அகத்தின் அழுக்கை உணரும்போது 
ஆண்டவர் வாக்கைப் புரிவீரே.
நுகத்தை உடைத்து விடுதலை வாங்க 
நேராய்ச் சிலுவை வருவீரே!
ஆமென்.