உதிரத்தில் தான் உயிர் உறைதல்;

ஒருவரையும் கொல்லாதீர்.

எதிரி என்றாலும் இறை சாயல்;

எனவே தீது சொல்லாதீர்.

பதிலாய்ச் செய்யும் பழிவாங்கல்,

பாவச்செயல், செல்லாதீர்.

அதுவே அந்நாள் உடன்படிக்கை;

அதற்கெதிராக நில்லாதீர்!

(தொடக்க நூல் 9:1-17)

May be an image of 6 people