யோவான் 7:12-13.

நல்வழி:

பொல்லான் என்று புவியோர் சொன்னால்,

பொல்லானாகிக் கெடுவேனோ?

நல்லான் என்று நால்வர் கண்டால்,

நல்லவனாகியும் விடுவேனோ?

இல்லாதவரை ஏய்ப்போர் நோக்கில்,

இவைகள் பெருமை ஆகலாம். 

எல்லாமறிந்த இறையின் வாக்கில்,


இழிவுச் சிறுமை நோகலாம்!

 
ஆமென். 


-கெர்சோம் செல்லையா.