புவியோர் சொன்னால்!

புவியோர் சொன்னால்…….

நற்செய்தி: யோவான் 7:12.


12. ஜனங்களுக்குள்ளே அவரைக்குறித்து முறுமுறுப்புண்டாயிற்று. சிலர்: அவர் நல்லவர் என்றார்கள். வேறுசிலர்: அப்படியல்ல, அவன் ஜனங்களை வஞ்சிக்கிறவன் என்று சொல்லிக்கொண்டார்கள்.

13. ஆனாலும் யூதருக்குப் பயந்திருந்ததினாலே, ஒருவனும் அவரைக்குறித்துத் தாராளமாய்ப் பேசவில்லை.

நல்வழி:


பொல்லான் என்று புவியோர் சொன்னால்,
பொல்லானாகிக் கெடுவேனோ?
நல்லான் என்று நால்வர் கண்டால்,
நல்லவனாகியும் விடுவேனோ?
இல்லாதவரை ஏய்ப்போர் நோக்கில்,
இவைகள் பெருமை ஆகலாம்.
எல்லாமறிந்த இறையின் வாக்கில்,
இழிவுச் சிறுமை நோகலாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.