யாரைத் தேர்ந்தெடுக்கிறோம்?

யாரைத் தேர்வு செய்கிறோம்?

இறை மொழி: யோவான் 18:39-40.

39. பஸ்காபண்டிகையில் நான் உங்களுக்கு ஒருவனை விடுதலைபண்ணுகிற வழக்கமுண்டே; ஆகையால் யூதருடைய ராஜாவை நான் உங்களுக்காக விடுதலை பண்ண உங்களுக்கு மனதுண்டா என்றான்.

40. அப்பொழுது: அவர்களெல்லாரும் இவனையல்ல, பரபாசை விடுதலைபண்ணவேண்டும் என்று மறுபடியும் சத்தமிட்டார்கள்; அந்தப் பரபாசென்பவன் கள்ளனாயிருந்தான்.

இறை வழி:

திருடரும் தூயரும் தேர்வில் நின்றால்,

திருடரே வெல்கிறார்; காணுகிறோம்.

அறிஞரும் மடையரும் போட்டியிட்டால்,

அறிஞர் தோற்கிறார்; நாணுகிறோம்.

உருப்பட மாட்டா உலகோர் வென்றால்,

ஊர்தான் அழியும்; கோணுகிறோம்.

இறையறிவில்லா நிலைமை இதுதான்;

எனவே, இயேசுவைப் பூணுகிறோம்!

ஆமென்.

May be an image of 1 person and text