குற்றமற்றவரை அடிப்பது!

குற்றமற்றவரை அடித்தல்!

இறை மொழி: யோவான் 19:1-4.

1. அப்பொழுது பிலாத்து இயேசுவைப் பிடித்து வாரினால் அடிப்பித்தான்.

2. போர்ச்சேவகர் முள்ளுகளினால் ஒரு முடியைப் பின்னி அவர் சிரசின்மேல் வைத்து, சிவப்பான ஒரு அங்கியை அவருக்கு உடுத்தி:

3. யூதருடைய ராஜாவே, வாழ்க என்று சொல்லி, அவரைக் கையினால் அடித்தார்கள்.

4. பிலாத்து மறுபடியும் வெளியே வந்து: நான் இவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன் என்று நீங்கள் அறியும்படிக்கு, இதோ, உங்களிடத்தில் இவனை வெளியே கொண்டுவருகிறேன் என்றான்.

இறை வழி:

குற்றமற்றவர் என்பதை அறிந்தும்,

கொடுமைப்படுத்தி அடிப்பதா?

உற்ற உறவில் ஒருவர் பட்டால்,

ஊரைத் திரட்டி துடிப்பதா?

பெற்ற பதவி துயர் தரத்தானா?

பிறருக்குரிமை இல்லையா?

சற்று நேரம் சமநிலை மறந்தோர்,

சாய்ந்த கதையும் சொல்லவா?

ஆமென்.

May be a doodle