உண்மை!

உண்மை என்றால் என்ன?

இறை மொழி: யோவான் 18: 38.

38. அதற்குப் பிலாத்து: சத்தியமாவது என்ன என்றான். மறுபடியும் அவன் யூதர்களிடத்தில் வெளியே வந்து: நான் அவனிடத்தில் ஒரு குற்றமும் காணேன்.

இறை வழி:

அறிய விரும்பும் குழந்தையைப் போன்று,

ஆளுநர் பிலாத்து கேட்டாலும்,

தெரிய முயன்றிட வில்லை என்று,

தெய்வ நூல் சொல்கிறது.

பெரிய பதவியைப் பெற்றவர் இன்று,

பேர் புகழ்ச்சி தொட்டாலும்,

வறிய மனிதர் மெய்யே நன்று;

வாய்மை தான் வெல்கிறது!

ஆமென்.

No photo description available.