யாருடன் இணைந்தோம்?
இறை மொழி : யோவான் 15:7-8.
7. நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.
8. நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.
என் வழி:
தேருடன் பூட்டிய குதிரைகள் இணைந்து
தெரு வழி சென்றால் நன்மை.
யாருடன் செல்கிறோம் என்பதை மறந்து,
எண் திசை நோக்கின் தீமை.
வேருடன் இணைந்து வளரும் செடியால்,
விளைகிற கனிகள் நன்மை.
ஆருடம் நம்பி அன்பைப் பிடியார்,
அறுவடை செய்வதோ தீமை!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா