இறையன்பு!

இறையன்பு!
இறைமொழி: யோவான் 15:9.

9. பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.

என் வழி:

தந்தை இறையிடம் அன்பைப் பெற்று,
தரணியருக்கு இறைமகன் ஈந்தார்.
எந்தையர் அன்பை அவரிடம் கற்று,
எங்களுக்கும் பகிர்ந்து தந்தார்.
முந்தி இறையிடம் பெறுகிற அன்பு,
முக்காலமும் நிலைக்கும் என்றார்.
இந்த அன்பே இறைவனின் பண்பு;
ஏற்பவரும் அமைதி கண்டார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.