கிளை!

கிளை!

இறை மொழி: யோவான் 15:4-6.

என் வழி:

முறிந்த கிளையால் பயனொன்றில்லை;
மூடர் பிரிந்து செல்கின்றார்.
உரிந்த பட்டை வளர்வதும் இல்லை;
உடையை கிறித்து நல்கின்றார்.
அறிந்த அடியார், தனியாய்ச் செல்லார்;
ஆண்டவரோடு கனி தருவார்.
எரிந்த விறகு எனப்படும் பொல்லார்,
ஏமாற்றமே இனி பெறுவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.