மறைவில் இருப்பவர்!

மறைவில் இருப்போர் பலருண்டு!

இறை மொழி: யோவான் 19: 39-40.

38. இவைகளுக்குப்பின்பு அரிமத்தியா ஊரானும், யூதருக்குப் பயந்ததினால் இயேசுவுக்கு அந்தரங்க சீஷனுமாகிய யோசேப்பு இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோகும்படி பிலாத்துவினிடத்தில் உத்தரவு கேட்டான்; பிலாத்து உத்தரவு கொடுத்தான். ஆகையால் அவன் வந்து, இயேசுவின் சரீரத்தை எடுத்துக்கொண்டுபோனான்.

39. ஆரம்பத்திலே ஒரு இராத்திரியில் இயேசுவினிடத்தில் வந்திருந்த நிக்கொதேமு என்பவன் வெள்ளைப்போளமும் கரியபோளமும் கலந்து ஏறக்குறைய நூறு இராத்தல் கொண்டுவந்தான்.

40. அவர்கள் இயேசுவின் சரீரத்தை எடுத்து, யூதர்கள் அடக்கம்பண்ணும் முறைமையின்படியே அதைச் சுகந்தவர்க்கங்களுடனே சீலைகளில் சுற்றிக் கட்டினார்கள்.

இறை வழி:

மறைவில் இருப்பவரானாலும்
மனதுள் அவரும் கிறித்தவரே.
திரைமுன் தெரியாதிருந்தாலும்,
தெய்வ அருளில் பெருத்தவரே.
இறையின் தெரிவில் யாருண்டு?
இங்கே கேட்டு குழம்பாதீர்.
நிறைவில்  காணும் பேறுண்டு;
நேர்மை மறந்து விளம்பாதீர்!

ஆமென்.

john19_38-39-new15.jpg