இறை வாக்கின்படி!

நிறைவேறும் இறைவாக்கு!

இறை மொழி: யோவான் 19:36-37.

36. அவருடைய எலும்புகளில் ஒன்றும் முறிக்கப்படுவதில்லை என்கிற வேதவாக்கியம் நிறைவேறும்படி இவைகள் நடந்தது.

37. அல்லாமலும் தாங்கள் குத்தினவரை நோக்கிப்பார்ப்பார்கள் என்று வேறொரு வேதவாக்கியம் சொல்லுகிறது.

இறை வழி:

முன்னே உரைத்த வாக்கொத்து,

முழுதும் வாழ்ந்த தெய்வ மகன்,

அந்நாள் உரோமன் நோக்கொத்து,

அருவிப் புனல் நீர் வடித்தார்.

பின்னே ஐயம் நமக்கெதற்கு?

பிறவிப் பயன் பெறுவதற்கு,

சென்னீராற்றில் இறங்கிடுவோம்.

சீரேசு நம் கை பிடித்தார்!

ஆமென்.

May be an image of waterfall and text that says 'There is a Fountain- 196 There is a fountain filled with blood Drawn from Immanuel's veins And sinners plunged beneath that flood Lose all their guilty stains:'