போதாது! போதாது!

போதாது! போதாது!

இறை மொழி: யோவான் 21:25.

25. இயேசு செய்த வேறு அநேக காரியங்களுமுண்டு; அவைகளை ஒவ்வொன்றாக எழுதினால் எழுதப்படும் புஸ்தகங்கள் உலகம் கொள்ளாதென்று எண்ணுகிறேன். ஆமென்

இறை வழி:

இறைமகன் செய்த அருஞ்செயல் கண்டு,

எழுதிய நூல்கள் போதாது.

குறைவற அவற்றின் விளக்கம் கொண்டு

கொடுத்த தாள்கள் போதாது.

மறைநூல் கற்கும் மகிழ்வில் நின்று,

மாட்சி சொல்வரும் போதாது.

நிறைவின் வாழ்வு இறைதானென்று,

நேர்வழி செல்வரும் போதாது!

ஆமென்.

எழுதி வழங்கியவர்: கெர்சோம் செல்லையா. சென்னை-99.

May be an image of 1 person and beard