இறைவன் எங்கே?

இறைவன் எங்கே? 

(எழுதி வழங்குபவர்:

கெர்சோம் செல்லையா)

அங்குமில்லை, இங்குமில்லை, 

ஆண்டவர் எனும் இறைவன்;

எங்குமில்லை, எங்குமில்லை, 

என்கிறான் அறியா மனிதன்.

உங்களுள்ளே உங்களுள்ளே 

ஒளிந்து கடந்திருப்பேன்.

இங்கு எனை ஏற்பவர் யார்?

என்கிறான் நல்லிறைவன்!

இன்று இறை காண்பதற்கு 

என்னவெல்லாம் உண்டு? 

என்று இங்கு கேட்பவர்க்கு,

நல்ல விடை உண்டு.

நின்று அசைந்தாடுகின்ற 

நிலையில்லா இயற்கை 

அன்று முதல் சொல்கிறது,

அதுவே  படைப்பென்று!

படைப்பு ஒன்று உண்டு எனில்,

படைத்தவர் அவர் எங்கே? 

கிடைத்திடும் வரலாறுகளில் 

கேட்கிறார் பலர் இங்கே. 

துடைத்திடும் கண் காட்சிகளில்,

தெரியாது இருப்பதினால்,

விடைக்கெல்லாம் அடித்தளமாம் 

விவிலியம் பார், அன்பே!

தொடரும்……