சான்றுரைக்கும் யோவான்!

கண்டவன் சான்று!

இறை மொழி: யோவான் 21:24.

24. அந்தச் சீஷனே இவைகளைக் குறித்துச் சாட்சிகொடுத்து இவைகளை எழுதினவன்; அவனுடைய சாட்சி மெய்யென்று அறிந்திருக்கிறோம்.

இறை வழி:

அன்று கண்ட அடியார் யோவான்

அதனைச் சான்றாய் எழுதினார்.

நன்கு கண்ட காட்சியைத்தான்,

நம்பி மெய்வழி ஒழுகினார்.

பின்பு நமக்கு எழுதும் முன்னர்

பெரிய அன்பிலே முழுகினார்.

இன்று இதனை வாசித்தறிவோர்,

ஏற்பின் தம் கறை கழுவுவார்!

ஆமென்.

May be an image of 1 person and text