பேச்சைக் குறைப்போம்!

பேச்சைக் குறைப்போம்!
இறை வாக்கு: யோவான் 14:29-31

  1. இது நடக்கும்போது நீங்கள் விசுவாசிக்கும்படியாக, நடப்பதற்குமுன்னமே இதை உங்களுக்குச் சொன்னேன்.
  2. இனி நான் உங்களுடனே அதிகமாய்ப் பேசுவதில்லை. இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை.
  3. நான் பிதாவில் அன்பாயிருக்கிறேனென்றும், பிதா எனக்கு, கட்டளையிட்டபடியே செய்கிறேன் என்றும், உலகம் அறியும்படிக்கு இப்படி நடக்கும். எழுந்திருங்கள், இவ்விடம்விட்டுப் போவோம் வாருங்கள் என்றார்.

இறை வாழ்வு:

நன்முறை எதுவென அறியாருக்கு,
நாளும் நாளும் சொல்கிறேன்.
வன்முறை அல்ல, வாள் வழியல்ல,
வாழும் அன்பால் சொல்கிறேன்.
என்னுரை கேட்க விரும்பருக்கு,
என் வாய் மூடிச் செல்கிறேன்.
இன்னுரை என்பது, இயேசு மொழிவது;
ஏற்பவர் தேடிச் செல்கிறேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.