தன்னிலும் பெரியவர்!

தன்னிலும் பெரியவர்!

இறைவாக்கு:யோவான் 14: 28.

  1. நான் போவேன் என்றும், திரும்பி உங்களிடத்தில் வருவேன் என்றும் நான் உங்களுடனே சொன்னதைக் கேட்டீர்களே. நீங்கள் என்னில் அன்புள்ளவர்களாயிருந்தால் பிதாவினிடத்திற்குப் போகிறேனென்று நான் சொன்னதைக்குறித்துச் சந்தோஷப்படுவீர்கள், ஏனெனில் என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்.

இறை வாழ்வு:

இன்னில மக்களை மீட்பதற்கென்று,
இரங்கி ஏழையாய் வந்தவரே,
தன்னிலும் பெரியவர் தந்தையென்று,
தரணி வாழ்விலே சொன்னவரே,
என்னிலையாயினும் என்னிலுமின்று,
இருந்திட ஆவியார் தந்தவரே,
முன்னிலை மறவா மகனென இன்று,
முன்னே நின்றேன் என்னவரே!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.