கனி!

கனி!

இறைவாக்கு: யோவான் 15:1-3.

  1. நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர்.
  2. என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.
  3. நான் உங்களுக்குச் சொன்ன உபதேசத்தினாலே நீங்கள் இப்பொழுதே சுத்தமாயிருக்கிறீர்கள்.

இறை வாழ்வு:

எங்கே ஒருவர் என்னிடம் வந்து,
யானும் கிறித்தவனே என்றால்,
அங்கே அவரது செயலில் கிறித்து,
எங்கே என்று நான் பார்ப்பேன்.
இங்கே இப்படி கிறித்துவின் அன்பு,
இவரால் உதவி செய்யுமென்றால்,
பங்கம் இல்லா பழச் சாறென்று,
பாசத்தோடுதான் சேர்ப்பேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.