புவி அரசரில்லை!

புவியரசு இல்லை!

இறை மொழி: யோவான் 18: 33-36.

33. அப்பொழுது பிலாத்து மறுபடியும் அரமனைக்குள் பிரவேசித்து, இயேசுவை அழைத்து: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான்.

34. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: நீராய் இப்படிச் சொல்லுகிறீரோ? அல்லது மற்றவர்கள் என்னைக்குறித்து இப்படி உமக்குச் சொன்னார்களோ என்றார்.

35. பிலாத்து பிரதியுத்தரமாக: நான் யூதனா? உன் ஜனங்களும் பிரதான ஆசாரியரும் உன்னை என்னிடத்தில் ஒப்புக்கொடுத்தார்கள், நீ என்ன செய்தாய் என்றான்.

36. இயேசு பிரதியுத்தரமாக: என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதல்ல, என் ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியதானால் நான் யூதரிடத்தில் ஒப்புக்கொடுக்கப்படாதபடிக்கு என் ஊழியக்காரர் போராடியிருப்பார்களே; இப்படியிருக்க என் ராஜ்யம் இவ்விடத்திற்குரியதல்ல என்றார்.

இறை வழி:

பாண்டிய, சோழ, சேரர் போன்று,

பாரினில் அரசையும் தரவில்லை.

தோண்டிய செல்வம் குவித்து நின்று,

துரை போல் ஆளவும் வரவில்லை.

வேண்டிய மனிதர் விடுதலைக்கென்று,

விண்விட்டு இயேசு புவி வந்தார்.

தாண்டிய போதும் பொறுப்பார் இன்று;

தரணிக்கு மாதிரி அவர் தந்தார்!

ஆமென்.

May be an image of 1 person and text that says 'Pilate asked Him, Are You the King of the Jews? John 18:33'