குற்றச்சாட்டு மாறுவதேன்?

குற்றச்சாட்டு மாறுவதேன்?

இறை மொழி: யோவான் 18: 29-32.

29. ஆதலால் பிலாத்து அவர்களிடத்தில் வெளியே வந்து: இந்த மனுஷன்மேல் என்ன குற்றஞ்சாட்டுகிறீர்கள் என்றான்.

30. அவர்கள் அவனுக்குப் பிரதியுத்தரமாக: இவன் குற்றவாளியாயிராவிட்டால், இவனை உம்மிடத்தில் ஒப்புக்கொடுக்கமாட்டோம் என்றார்கள்.

31. அப்பொழுது பிலாத்து அவர்களை நோக்கி: இவனை நீங்களே கொண்டுபோய், உங்கள் நியாயப்பிரமாணத்தின்படி நியாயந்தீருங்கள் என்றான். அதற்கு யூதர்கள்: ஒருவனையும் மரண ஆக்கினை செய்ய எங்களுக்கு அதிகாரமில்லை என்றார்கள்.

32. தாம் இன்னவிதமான மரணமாய் மரிக்கப்போகிறாரென்பதைக்குறித்து இயேசு குறிப்பாய்ச் சொல்லியிருந்த வார்த்தை நிறைவேறத்தக்கதாக இப்படிச் சொன்னார்கள்.

இறை வழி:

இறைப்பழி சுமத்தி இயேசுவைக் கொல்ல

இவர்கள் முயன்று எழுந்தாலும்,

அறையும் படிக்குத் தீர்ப்பைச் சொல்ல

அது போதாதென அறிவார்கள்.

விரைவில் அழிவு வருவதைக் காட்டும்,

வியத்தகு கண்கள் இழந்தாரும்,

அரசைக் கவிழ்க்க ஆட்களைக் கூட்டும்

அநீதிப் பழிதான் தெரிவார்கள்!

ஆமென்.

May be an image of 6 people and text that says 'GoodSalt.com Used with permission.'