உண்மையின் அரசர்!

உண்மை!

இறை மொழி: யோவான் 18:37.

37. அப்பொழுது பிலாத்து அவரை நோக்கி: அப்படியானால் நீ ராஜாவோ என்றான். இயேசு பிரதியுத்தரமாக: நீர் சொல்லுகிறபடி நான் ராஜாதான்; சத்தியத்தைக்குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்; சத்தியவான் எவனும் என் சத்தம் கேட்கிறான் என்றார்.

இறை வழி:

இங்கே பலரிடம் தேடிப் பார்த்தேன்;

இல்லாதிருப்பது உண்மையே.

எங்கே இருக்கும் ஓடிப் பார்த்தேன்;

யாவும் இங்கு பொய்மையே.

மங்கும் கண்ணை மூடிப் பார்த்தேன்;

மனதில் வந்தார் ஒருவரே.

அங்கே உண்மை, கோடி பார்த்தேன்.

அவர்தான் இயேசு அரசரே!

ஆமென்.

May be an image of chess and text that says 'The King of Truth -John 18:37 NLT- heartlight.org'