பகை ஏன்?

பகை!

இறை மொழி: யோவான் 15:24.

  1. வேறொருவரும் செய்யாத கிரியைகளை நான் அவர்களுக்குள்ளே செய்யாதிருந்தேனானால், அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுது அவர்கள் என்னையும் என் பிதாவையும் கண்டும் பகைத்துமிருக்கிறார்கள்.

இறை வழி:

எத்தனையோ அருஞ்செயல்கள் செய்தும்,
இயேசுவைப் பலபேர் ஏற்கவில்லை.
அத்தனையும் நம் வாழ்விற்கிருந்தும்,
அவரைத் திரும்பிப் பார்க்கவில்லை.
இத்தனைப் பகையும் வெறுப்பும் எதற்கு?
ஏன் என எனக்கும் புரியவில்லை.
மொத்தமும் அலகையின் குடியிருப்பு;
மீளார் அறிவைத் தெரியவில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.