பகை!

பகை!

இறை மொழி: யோவான் 15:22-23.

  1. நான் வந்து அவர்களிடத்தில் பேசாதிருந்தேனானால் அவர்களுக்குப் பாவமிராது; இப்பொழுதோ தங்கள் பாவத்தைக்குறித்துப் போக்குச்சொல்ல அவர்களுக்கு இடமில்லை.
  2. என்னைப் பகைக்கிறவன் என் பிதாவையும் பகைக்கிறான்.

இறை வழி:
சொல்லிக் கொடுத்தும் அவர் ஏற்கவில்லை.
சொன்னவரை நம்பிப் பார்க்கவில்லை.
உள்ளில் இருக்கிற பகை வெறியால்,
உதவி, பசி துயர் தீர்க்கவில்லை.
கள்ளின் மயக்கம் இனி தெளியாதோ?
கனியும் இயேசுவுள் களியாதோ?
அள்ளிச் செல்லுதே தீப்பிழம்பு.
அறிந்த கண்ணும் விழியாதோ?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.