என்ன கற்கிறோம்?

வெறும் இளங்கலைப் பட்டமேயன்றி,
வேறு பட்டம் எடுக்கவில்லை.
அரும் செல்வமாய்த் தோண்டியெடுத்தும்,
அது பறக்கையில், தடுக்கவில்லை.
பெரும் பொருள் தேடி அலைந்தேனேயன்றி,
பிறப்பின் நோக்கம் கற்கவில்லை.
நறும் மணமாய் இறை நற்செய்தி தரவே,
நான் வேறிடம் நிற்கவில்லை!

-கெர்சோம் செல்லையா.