தெரிந்தார்!

என்னையும் தெரிந்தார்!
இறை மொழி; யோவான் 15:16.

  1. நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.  

இறை வழி:

முன்னிலை வாழ்க்கையை நோக்கிப் பார்த்தேன்.
முரடன் மூடன் எனத்தான் இருந்தேன்.
என்னிலை காண்கிற  இயேசுவைப் பார்த்தேன்;
இடைவெளி பெரிது, யானோ பொருந்தேன்.
அந்நிலை  அகற்றிட அழைத்ததும் பார்த்தேன்;
அவர் தெரியாவிடில் அடியனும் திருந்தேன்.
நன்னிலை என்ன? நான் இன்று பார்த்தேன்;
நற்கனி அன்பு, வருவதால் வருந்தேன்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.