நண்பர்!

நண்பன்!

இறை மொழி: யோவான் 15:14-15.

14. நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

15. இனி நான் உங்களை ஊழியக்காரரென்று சொல்லுகிறதில்லை, ஊழியக்காரன் தன் எஜமான் செய்கிறதை அறியமாட்டான். நான் உங்களைச் சிநேகிதர் என்றேன், ஏனெனில் என் பிதாவினிடத்தில் நான் கேள்விப்பட்ட எல்லாவற்றையும் உங்களுக்கு அறிவித்தேன்.

இறை வழி:

அன்புடன் ஒருவர்  பணி செய்வாரெனில்,
அவரை மதிப்பார் அவர் தலைவர்.
இன்புறு நெஞ்சில் இடமும் கொடுத்து,
இவர்  என்  நண்பர் என அணைப்பர்.
பண்புடன் வாழ, தமை அளிப்பாரெனில் 
பலர் முன்னிலையில் உயர்வடைவர்.
பின்னால் வருவதை முன்னால் அறியும், 

பேரறிவிலும் இறை இணைப்பர் !

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.