சாதியும் நிறமும்!

அழுவோர், அழுதுகொண்டே இருக்கலாம்!

சாதி பார்க்கும் நாடுகளில், சாதியைப் பார்த்து, உயர்வு தாழ்வு என்று மக்களைப் பிரிக்கிறார்களேயன்றி, சமயம் பார்த்து ஒருவரை ஏற்பதுமில்லை, புறக்கணிப்பதுமில்லை. சமயம் மாறுமுன் இருந்த, தேவர்கள், தேவேந்திரர்கள், நாடர்கள், நாயுடுகள், பிள்ளைகள், பிராமணர்கள், சமயம் மாறிய பின்னரும், சாதியை விடாமல் பார்க்கிறார்கள், சாதியாலேயே பார்க்கப்படுகிறார்கள்! அரசு ஆவணங்களிலும் அவர்கள் சாதியுடன்தான் சேர்க்கப்படுகிறார்கள்! சமயம் மாற உரிமையுள்ள நாட்டில், சாதி மாற உரிமையில்லையே!நிறம் பார்த்து மக்களைப் பிரிப்பவர்களுக்கும் இது பொருந்தும். சமயம் மாறினாலும், சற்று விலகி வேறு நாடு சென்று குடியேறினாலும், நிறம் மாறாதே! இறைவன் முன்னிலையில் யாவரும் ஒன்றுதான். ஏறத்தாழ எல்லா நாடுகளின் சட்டமும் இதுபோலத்தான். இருப்பினும், மனிதர் மனிதரைப் பிரித்துத்தான் பார்க்கிறார். இந்த பிரிவினை எங்கும் உளது; இந்தியாவிலும் உளது!இதை எப்படி மாற்ற இயலும்? ‘யாவரும் ஒரே உதிரத்திலிருந்து பிறந்தவர்கள்’, ‘எல்லா மனிதரும் இறை சாயலில் தோன்றியவர்கள்’, ‘எல்லோரும் இணையானவர்கள்’, ‘அனைவரும் ஒன்றே’ எனச் சொல்லும் இறைவாக்குகளின் நல்லெண்ணம் எப்போது நம்மனைவர் உள்ளில் குடிவருமோ, அப்போதுதான் எல்லா சாதிப் பேய்களும் தொலையும்; பிரித்தாளும் பிசாசுகளின் கூடாரங்களும் கலையும்!அதுவரை எழுதுவோர் எழுதலாம்; அழுது வடிப்போர்… அழுதுகொண்டே இருக்கலாம்!-கெர்சோம் செல்லையா.