பெயர் பார்த்து வருவோர்!

பெயர் பார்த்து வருகிறார்கள்!

இறைவாக்கு: யோவான் 12:20-22.

20. பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள்.

21. அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.

22. பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்.  

இறைவாழ்வு; 
பிலிப்பு அந்தி ரேயரின்,  
பெயர்கள் கிரேக்கமானதால், 
விழிப்பு நாடும் கிரேக்கர்கள்,
விண்ணரசு கேட்டார்கள்.
வலிப்பு கண்ட எளியரின்,
வாழ்வு இன்று அழுகையில்,
ஒலிப்பு ஓசை கிறித்தர்கள்,  
உதவினால் மீட்பார்கள்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.