கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

கிறித்தவருக்கும் இது பொருந்தும்!

உன்னை ஒருவன் தாழ்ந்தோனென்றால்,

உனது நெஞ்சம் துடிக்காதா?

பின்னை எதற்குப் பிறரை விளித்தாய்?

பிழையால் கலகம் வெடிக்காதா?

தன்னை உயர்வாய் எண்ணுவதெல்லாம்,

தவறென மூளையும் படிக்காதா?

இன்னில மக்கள் யாவரும் இணையே.

இறை வாக்குனக்குப் பிடிக்காதா?

-கெர்சோம் செல்லையா.

May be an image of 4 people, child and text that says 'WE ARE... ALL EQUAL @crystalkidscenter'