இப்படை எதற்கு?

இப்படை எதற்கு?

இறை மொழி: யோவான் 18:1-3.

1. இயேசு இவைகளைச் சொன்னபின்பு, தம்முடைய சீஷருடனேகூட கெதரோன் என்னும் ஆற்றுக்கு அப்புறம் போனார்; அங்கே ஒரு தோட்டம் இருந்தது, அதிலே அவரும் அவருடைய சீஷரும் பிரவேசித்தார்கள்.

2. இயேசு தம்முடைய சீஷருடனேகூட அடிக்கடி அங்கே போயிருந்தபடியினால், அவரைக் காட்டிக்கொடுக்கிற யூதாசும் அந்த இடத்தை அறிந்திருந்தான்.

3. யூதாஸ் போர்ச்சேவகரின் கூட்டத்தையும் பிரதான ஆசாரியர் பரிசேயர் என்பவர்களால் அனுப்பப்பட்ட ஊழியக்காரரையும் கூட்டிக்கொண்டு, பந்தங்களோடும் தீவட்டிகளோடும் ஆயுதங்களோடும் அவ்விடத்திற்கு வந்தான்.

இறை வழி:

முன்னூறு நானூறு வீரரின் கூட்டம்

முற்றுகை இடவா செல்கிறது?

அந்நூறு படையை அனுப்புந் திட்டம்,

அறிவு உடமையா சொல்கிறது?

செந்நீர் வடிக்க எண்ணும் நெஞ்சம்,

சீரிய வாழ்வைக் கொல்கிறது.

எந்நாளாயினும் வஞ்சம், வஞ்சம்;

இன்றும் மெதுவாய் மெல்கிறது!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an illustration of text