துணிவு!

தேடுவோர் முன்!

இறை மொழி: யோவான் 18:4-5.

4. இயேசு தமக்கு நேரிடப்போகிற எல்லாவற்றையும் அறிந்து, எதிர்கொண்டுபோய், அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்றார்.

5. அவருக்கு அவர்கள் பிரதியுத்தரமாக: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள். அதற்கு இயேசு: நான்தான் என்றார். அவரைக் காட்டிக்கொடுத்த யூதாசும் அவர்களுடனேகூட நின்றான்.

இறை வழி:

கொல்ல வருபவர் என்றே அறிந்தும்,

கொடுக்க இயேசு முன் சென்றார்.

நல்ல எண்ணம் கொள்ளார் வந்தும்,

நன்மையாக்கவே, அவர் சென்றார்.

எல்லை இல்லா அன்பை ஈந்தும்,

எதிர்ப்பார் கொல்லவே நின்றார்.

சொல்லை அறியார் பெருத்திருந்தும்,

சொன்ன சொல்லாய் இறை நிற்பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be a graphic of monument